.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பொறியியல் கலந்தாய்வு நிறைவு: ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன!

Unknown | 2:29 PM | 0 comments




தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நிறைவு பெற்ற நிலையில், பல்வேறு கல்லூரிகளில் இன்னும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

பொறியியல் படிப்புக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. இதில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடத்திட்டம் கொண்ட கல்லூரிகளை தேர்வு செய்தனர். 28 நாட்களாக நடைபெற்ற இந்த கவுன்சிலிங் நிறைவு பெற்றது.

அங்கீரிக்கப்பட்ட 538 கல்லூரிகளில் மொத்தம் 211589 இடங்கள் இருந்தன. இதில் கவுன்சிலிங் மூலம் 109079 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 102510 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சுய நிதிக் கல்லூரிகளில் மட்டும் 101705 இடங்கள் காலியாக உள்ளன.

காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்புவதற்காக துணை கலந்தாய்வு நாளை மறுநாள் நடக்கிறது. இதில், சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் நாளை பதிவு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1