தமிழகம் முழுவதும் 95 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு!
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அரூர் டில்லிபாபு கேட்ட கேள்விகளுக்கு தொழில் துறை அமைச்சர் மோகன் அளித்த பதில் வருமாறு:
தமிழகம் முழுவதும் இதுவரை 94 லட்சத்து 58 ஆயிரத்து 161 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 930 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 31 ஆயிரத்து 471 பேர் தர்மபுரி மாவட்டத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 5 புதிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைக்க னீ1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மோகன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இதுவரை 94 லட்சத்து 58 ஆயிரத்து 161 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 930 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 31 ஆயிரத்து 471 பேர் தர்மபுரி மாவட்டத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 5 புதிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைக்க னீ1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மோகன் தெரிவித்தார்.
Category: மாநில செய்தி


0 comments