.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் 89,382 பேர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பு!

Unknown | 9:41 PM | 0 comments

நெல்லை : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு 89,382 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த ஆண்டை விட  39 ஆயிரத்து 518 பேர் கூடுதலாக பயனடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி (ஆர்டிஇ) கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற உத்தரவு கடந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் இந்த குறிப்பிட்ட 3 வகுப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர் களுக்குரிய கல்விக் கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது. கடந்த ஆண்டு இச்சட்டம் தொடர்பாக அதிக விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த எண்ணிக்கையிலேயே ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்ட னர். இதையடுத்து இந்த கல்வி ஆண்டு தொடக்கம் முதலே இச்சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது. 

இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் கல்வி அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதன் விவரம் குறித்து நேரடியாக ஆய்வு நடத்தினர். இதன் எதிரொலியாக இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்து 452 தனியார் பள்ளிகளில் 89 ஆயிரத்து 382 மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.இதில் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் 3 ஆயிரத்து 642 பள்ளிகளில் 42 ஆயிரத்து 586 பேரும், தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 5,441 தனியார் பள்ளிகளில் 43 ஆயிரத்து 837 பேரும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள 369 பள்ளிகளில் 2 ஆயிரத்து 959 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அனைத்து தனியார் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 49 ஆயிரத்து 864 பேர் மட்டுமே ஆர்டிஇ சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு பயனடைந்தனர். 

இந்த ஆண்டு கூடுதலாக 39 ஆயிரத்து 518 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் முழு அளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. இதனிடையே கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணம் சுமார் 35 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படாததால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு சேர வேண்டிய நிதியை வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1