.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வரும் கல்வி ஆண்டில் கவுன்சிலிங் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனுமதி சேர்க்கை!

Unknown | 2:34 PM | 0 comments




சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் கல்வி பட்டப்படிப்புகளுக்கான 2014-15 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை, பிளஸ்டூ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம், 
தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிகளின் படி நடைபெறும் என பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்றவுடன் பல்கலைக்கழக நிர்வாகியாக பொறுப்பேற்ற ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், கடந்த ஆண்டு பல்கலைக்கழக பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நுழைவுத்தேர்வுமூலமும், தகுதி அடிப்படையிலும், தமிழக அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் அனுமதி சேர்க்கை நடத்தினார்.வரும் கல்வி ஆண்டு அனுமதி சேர்க்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டம் 2013 (தமிழகஅரசு சட்டம் 20, 2013) அமலுக்கு வந்த பிறகு தொழில்கல்வி படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை மற்றும் இவை சார்ந்த படிப்பகளுக்கான சேர்க்கை, தமிழக தொழில்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கை சட்டம் 2006 (தமிழ்நாடு சட்டம் 3, 2007)படி நடைபெறும். இந்த சட்டத்தின்படி தொழில் படிப்புகளுக்கான சேர்க்கை பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடைபெறும்.தமிழக அரசாணையின்படி (நிலை எண்.39, 28-2-2014) அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு தொழில் கல்வி நிலையங்களுக்கான சேர்க்கை சட்டம் 2006-ன் படி செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் தொழில்கல்வி பட்ட படிப்புகளுக்கான 2014-15 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம், தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிகளின் படி நடைபெறும். கலந்தாய்வு சிதம்பரம் அண்ணாமலைநகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பம் விநியோகத்திற்கான தேதி, கலந்தாய்வு தேதி மற்றும் சேர்க்கைக்கான இதர விபரங்கள் விரைவில் முன்னணி பத்திரிகைகளில் விளம்பரங்கள் மூலமாகவும், பல்கலைக்கழக இணையதளம்www.annamalaiuniversity.ac.in மூலமாகவும் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1