ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - தனியார் பள்ளிகள் சம்மதம்!
சென்னை: ஏழை பள்ளி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தனியார் பள்ளிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
சென்னையில், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பு, எழை மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகை 3 மாதத்தில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் வேண்டுகோளை ஏற்று ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவதென்று முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் செலவுத் தொகையை அரசு தரவில்லை எனக் கூறி, இனிமேல் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கம் நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Category: கல்வி
0 comments