ஆபாச தளங்களை முடக்கும் சாஃப்ட்வேர் - மத்திய அரசு பரிந்துரை!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த கமலேஷ் பஞ்ச்வானி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல. பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இன்டர்நெட்டை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் இன்டர்நெட்டில் 20 கோடி ஆபாச வீடியோக்கள் இலவசமாக கிடைக்கின்றன. இன்டர்நெட்டில் ஆபாச படங்களை சிறுவர்களும் பார்க்கும் நிலை இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெடும் அபாயம் உள்ளது. ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும் தூண்டுதலால்தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள் நடக்கின்றன" எனக் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பதிலளிக்க மத்திய தொலை தொடர்பு துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் அளித்த பதில் மனுவில். "ஆபாச இணையதளம் என்று அனைத்தையும் முடக்கினால், மருத்துவம் தொடர்பான பல்வேறு தகவல்களும் முடக்கப்பட்டு விடும். இதனால், இவற்றை மக்கள் படித்து தெரிந்து கொள்ள முடியாத வகையில் பெரும் தீங்கு ஏற்படும். எனவே ஆபாச தளங்களை முடக்கும் சாப்ட்வேரை கம்ப்யூட்டரில் நிறுவிய பின்னரே அதனை விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
Category: மாவட்ட செய்தி
0 comments