.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வாழைப்பழம்!

Unknown | 9:16 PM | 0 comments


வாழைப் பழத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாததா என்று நீங்கள் சொல்லலாம். நிச்சயமாக வாழைப் பழத்தைப் பற்றி நாம் அனைவருமே அறிந்திருப்போம். ஆனால் ஒரு சில அறியாத விஷயங்களும் இருக்கக் கூடும்.

அவற்றைப் பார்ப்போம்.

வாழைப் பழம் சிறந்த பழமாக மட்டுமல்லாமல் அழகு சார்ந்த பொருளாகவும் உள்ளது. வாழைப் பழத்தில் சிறிது தேன், ஒரு சில சொட்டு ஆரஞ்சு சாறு கலந்து முகத்தில் பூசி வந்தால், சருமம் இளமையைத் தக்க வைத்துக் கொள்ளும்.

ஆல்கஹால் அருந்தியவர்களை உடனடியாக சீரான நிலைக்குக் கொண்டு வர வாழைப் பழத்தை சாப்பிட அளிக்கலாம். போதை மயக்கத்தில் இருப்பவர்களை உடனடியாக அதில் இருந்து மீட்கும் தன்மை வாழைப் பழத்திற்கு உள்ளது.

ஏதேனும் அசாதாரண சூழ்நிலையில் நமது உடல் படபடப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்படுவது போல் உணர்ந்தால், உடனடியாக வாழைப்பழம் சாப்பிடுங்கள். அதிக படப்படப்பால் உடல் இழந்த பொட்டாசியத்தை வாழைப்பழம் அளிக்கும்.

மூளைக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில் பொட்டாசியத்திற்கு அதிக பங்கு உள்ளது. எனவே, தேர்வு, நேர்காணல் போன்றவற்றிற்கு செல்லும் போது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு சென்றால் மூளை புத்துணர்ச்சியுடன் இருந்து படித்தவற்றை எல்லாம் நினைவுபடுத்தும்.

வயிற்றுக்கு எல்லா வகையிலும் வாழைப்பழம் சிறந்ததாக இருக்கிறது. எனவே, தினமும் நமது உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால் வயிறு தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தூக்கத்திற்கும் வாழைப்பழம் பேருதவி செய்யும். எனவே, சரியாக தூங்காத பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் ஒரு டம்ளர் பாலுடன் வாழைப் பழம் சாப்பிட்டால் நிச்சயமாக 8 மணி நேர தூக்கம் உறுதியாகும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1