.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் பரபரப்பு! அரசு ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!!

Unknown | 10:29 PM | 0 comments


பெரம்பலூர், அக். 13:
பெரம்பலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளருக்கு சொந்தமான வீட்டில் நேற்றுமுன்தினம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சி 1வது வார்டு ஆலம்பாடி சாலை அன்புநகரை சேர்ந்தவர் அய்யாவு (50). பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அன்புநகரில் உள்ள தனது வீட்டை, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியனுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை காலி செய்து விட்டார். தற்போது அந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்காக அய்யாவு ஆட்களை வைத்து பெயிண்ட் அடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 3 பீர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி அய்யாவு வீட்டின் மீது வீசினர். இதில் 2 குண்டுகள் வெடித்து வீட்டின் முன் பகுதி தீப்பிடித்தது. இதில் வீட்டு சுவரின் ஒரு பகுதி கருப்பாக மாறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்தது.
தகவலறிந்த அய்யாவு அங்கு சென்று பார்த்தார். வீட்டில் கரும்புகை மட்டும் இருந்தது. பெரிய அளவில் சேதம் இல்லை. இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெடிக்காமல் கிடந்த ஒரு பெட்ரோல் குண்டை கைப்பற்றினர்.
பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார், எதற்காக வீசினார்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1