ஷாக் அடிக்கும் செய்தி !?
தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2014,15ம் நிதியாண்டுக்கு, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உத்தேச பட்டியலை அறிவித்துள்ளது. இதன்படி 500 யூனிட்டுக்கு மேல் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 85 காசு உயர்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ரூ.1.05ம் தொழிற்சாலைகளுக்கு ரூ.1.72ம் உயர்த்தப்படுகிறது.இந்நிலையில் மின்சார கட்டண உயர்வு குறித்து ஆட்சோபனை / ஆலோசனை தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் 23-10-2014 க்குள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நுகர்வோர் மாத இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செயலர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் [ TNERC ]
19 A ருக்மணி லஷ்மிபதி சாலை
எழும்பூர் - சென்னை 600 008
நன்றி : நுகர்வோர் காவலர்
பரிந்துரை : சூனா ஈனா ( முத்துப்பேட்டை )


Category: மாநில செய்தி

0 comments