.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சின்னாறு அருகே வாகனம் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி!

Unknown | 1:27 PM | 0 comments


பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு  அடுத்துள்ள மங்களமேடு மின்சார அலுவலகம் எதிரே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாலிபர் பிணத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1