.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

முஸ்லிம்களின் தேசிய தலைவர் ஆகிறார் அஸதுத்தீன் உவைசி?

Unknown | 4:18 PM | 0 comments







2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூடிய முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அஸதுத்தீன் உவைசி ஆற்றிய உரை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஹைதராபாதில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் என்றாலும் இப்போது அந்த எல்லையையும் தாண்டி இதர மாநிலங்களிலும் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் அவ்ரங்காபாத், பைகுலா ஆகிய இரண்டு தொகுதிகளில் இத்திஹாத் கட்சி வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது.

அந்த இரண்டு தொகுதிகளிலும் முறையே சிவசேனா, பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி இத்திஹாத் வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமின்றி,மூன்று தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் ஒன்பது தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இத்திஹாத் கட்சிக்கு ஏற்கனவே தெலங்கானா மாநிலத்தில் ஏழு எம்எல்ஏக்களும் ஒரு எம்பியும் உள்னனர்.

மேற்கு வங்கம், உபி., கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இந்தக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.

இத்திஹாத் கட்சி தேசியக் கட்சியாகவும் உவைசி முஸ்லிம்களின் தேசிய தலைவராகவும் உருவாகி வருகிறார்.

அது சரி, தமிழகத்தில் இத்திஹாத் கட்சியின் கிளை இருக்கிறதா?

-சிராஜுல்ஹஸன்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1