.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி .களத்தூர் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ்கள் வினியோகம் கலெக்டர் தரேஸ் அஹமது அறிக்கை

Unknown | 5:18 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் அனைத்தும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளது.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:–

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

பெரம்பலூர் மாவட் டத்தில் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் வருவாய்த் துறை மூலம் சாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்கள் வருவாய் ஆய் வாளர் அலுவல கங்களில் இயங்கி வந்த பொதுமக்கள் சேவை மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரம் சான்றிதழ்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப் பட்டுள்ளன. 

பொதுமக்களின் வசதிக் காக வேப்பந்தட்டை, ஆலத் தூர், வேப்பூர் ஒன்றியங்களில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் வருவாய்த் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி, பெரம்பலூர் மாவட் டத்தில் 36 மையங்கள் தேர்வு செய்யப் பட்டுள் ளன.

சேவைக்கட்டணம் உயர்வு

ஆலத்தூர் வட்டத்திற் குட்பட்ட ஆலத்தூர், டி.களத்தூர், நாரணமங்கலம், நக்கசேலம், கொளக்காநத்தம், மேலமாத்தூர், ஜமீன் பேரை யூர், கீழமாத்தூர் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலமும், குன்னம் வட்டத் திற்குட்பட்ட திருமாந்துறை, அகரம்சீகூர், ஒகளூர், அத் தியூர், துங்கபுரம், புது வேட்டகுடி, கீழப்பெரம்பலூர், எஸ்.ஆடுதுறை, ஓலைப்பாடி, குன்னம், பரவாய், பெரு மத்தூர், அந்தூர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலமும், 


வேப்பந்தட்டை வட்டம் -வி .களத்தூர்

வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அன்ன மங்கலம், பெரியவடகரை, கை.களத்தூர், வேப்பந்தட்டை, தழுதாழை, வி.களத்தூர், தேவையூர், நெய்குப்பை, காரி யானூர், பாண்டகபாடி, அயன்பேரையூர், எறையூர், பிரம்மதேசம், இனாம் அகரம், திருவாளந்துறை ஆகிய கிரா மங்களில் உள்ள கிராம வறுமை சங்க ஒழிப்பு சங்கத்தின் மூலமும் வருவாய் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம். 

மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்களும், அதற்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும், இம்மையங் களில் விண்ணப்பம் அளித்து, சான்றிதழ்களையும் இம்மை யங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். வருவாய் ஆய்வாளர் அலுவலகங்க ளுக்கு சென்று சான்றிதழ்கள் பெற வேண்டிய அவசியம் இல்லை. வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சான்றி தழ்களுக்கான சேவைக் கட்டணம் ரூ.30–லிருந்து ரூ.40 ஆக உயர்த்தி வசூலிக் கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தினை தொடக்க வேளாண் கூட்டுறவு சங் கத்தின் மூலம் வழங்கிட சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு பயிற்சி வழங்கப்பட் டுள்ளது. விரைவில் வேளாண் கூட்டுறவு சங்கத் தின் மூலமும் விண்ணப் பங்கள் பெற்று சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1