.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபையில் புதிய பேருந்து நிலையம் திறப்பு!

Unknown | 4:36 AM | 0 comments



ஏகப்பட்ட 'இல்லை'களுடன் புதிய பேருந்து நிலையம் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் நிறைந்த துபையின் தெய்ரா பகுதியில் கடந்த செவ்வாய் (01.07.2014) முதல் 'உடனடியாக' பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.









ரிப்பன், கத்தரிக்கோல் இல்லை
தோரணங்கள் இல்லை, கல்வெட்டுக்கள் இல்லை
எந்த மந்திரி / விஐபியின் தேதிக்காகவும் காத்திருக்கவில்லை
தலைமை செயலகத்திலிருந்து கணோளி திரை மூலம் திறக்கப்படவில்லை
போஸ்டர் அடிக்கவில்லை
குத்து விளக்கு ஏற்றவில்லை
ஆட்சியாளர்களின் சாதனை பட்டியலில் இடம்பெறவில்லை
கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா தேதி கிடைக்காமல் பல மாத காலத்திற்கு மூடி வைக்கப்பட்டிருக்கவில்லை
விழாவும் இல்லை மேடையும் இல்லை
ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து சொரிந்து கொள்ளவில்லை
பத்திரிக்கைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் இல்லை
இதை வெளிநாட்டினர் தவிர ஒரு சதவிகித துபை குடிமகனும் பயன்படுத்த போவதுமில்லை

தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கிச் சாவும் துயரமும் இல்லை


இது எங்கள் ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டம் என அறிக்கை அக்கப்போர்கள் இல்லை
நைஃப் போலீஸ் முதல் மீன் மார்க்கெட் ரோடு வரை தற்போது பேருந்து போக்குவரத்து நெரிசல் இல்லை
இந்த புதிய பயனை அனுபவிக்கப்போகும் யாரும் துபை ஆட்சியாளர்களை தேர்நதெடுக்க ஒட்டுப்போட போவதுமில்லை
புதிய பஸ் ஸ்டேஷன் மாதிரியை வைத்து தேய்காய் பூஜை செய்யும் மெத்த படித்த, விஞ்ஞான கோமாளிகளும் இல்லை
இந்த பஸ் நிலையத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எந்த மீடியாவும் கதை விடவும் இல்லை
அட ஏன், திறந்தது கூட அருகே வசிக்கும் பலருக்கு தெரியவே இல்லை
என இன்னும் ஏகப்பட்ட 'இல்லை'களால் மக்கள் பயன் மட்டுமே 'உண்டு'.






இப்படி ஒரு இந்தியா எப்ப வரும்?! இந்த புதிய பேருந்து நிலையத்தை பற்றிய செய்தியின் காரணத்தை இப்போழுது புரிந்திருப்பீர்களே!






ஏற்கனவே சுமார் 500 மீட்டர் தூரத்தில் 'கோல்டு சூக் பஸ் ஸ்டேஷன்' செயல்பட்டு வந்த நிலையில் பாரமரிப்பு மற்றும் மராமத்து பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டு இந்த பேருந்து நிலையம் 'கோல்டு சூக் பஸ் ஸ்டேசன் எக்ஸ்டெர்னல்' என்ற பெயரில் ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டல் எதிர்புறம், பாம் தெய்ரா மெட்ரோ ஸ்டேஷன் மிக அருகிலும், கோட்டைப்பள்ளி பாதையை பாம் தெய்ரா மெட்ரோ ஸ்டேஷனுடன் இணைக்கும் நடைபாலத்தின் கீழும் இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகவும் வசதியான ஒன்றாக அமைந்துள்ளது.





மேலும் இதன் விர்வாக்கப் பணிகளும் தொடர்ந்து இரவு பகலாக நடந்து வருகின்றன.
தகவல்  :அதிரைஅமீன்

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1