வி.களத்தூர் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை தமிழ்செல்வன் MLA திறந்து வைத்தார்!!

வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் ஊராட்சி மேட்டுச்சேரி கிராமத்தில் புதியதாக பகுதி நேர ரேஷன் கடையை தமிழ்செல்வன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
முதல்வருக்கு கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத் துள்ள வி.களத்தூர் ஊராட்சி மேட்டுச்சேரி கிராமத்தில் சுமார் 150-கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் இவர் கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வி.களத் தூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, மண்எண் ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி வந்து பயன்படுத்தி வந்தனர். இது அந்தப்பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்ப்படுத்தி வந்தது. இதனைத்தொடர்ந்து மேட்டுச்சேரி கிராமத்திற்கென தனியாக பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்தனர்.
பகுதி நேர ரேஷன்கடை
இதனைத்தொடர்ந்து வி.களத்தூர் ரேஷன் கடை யிலிருந்து மேட்டுச்சேரி கிராமத்தை தனியாகப் பிரித்து பகுதிநேர ரேஷன் கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மேட்டுச் சேரி கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்செல்வன் தலைமை தாங்கி பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
மாவட்டக்கவுன்சிலர் செல்வராணி ராயமுத்து, ஊராட்சி மன்றத்தலைவர் நூருல்தா இஸ்மாயில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசந்திரன் , கூட்டுறவு சார் பதிவாளர் மணிமேகலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கீதா, வெண்பாவூர் முரு கேசன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் அ.தி.மு.க.பிரமுகர்கள் குண சேகரன், கண்ணபிரான், சூரிய குமார், கை.களத்தூர் வேல் முருகன் மற்றும் கிராமப் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அய்யாக்கண்ணு நன்றி கூறினார்.
Category: வி.களத்தூர்
0 comments