பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர் உள்பட 121 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நாளை மறுநாள் ( 12ம் தேதி) நடைப்பெருகிறது !கலெக்டர் தரேஸ் அகமது!
பெரம்பலூர், அக். 10:
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள்(12ம்தேதி) 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக்கூட்டம், அந்தந்த ஊராட்சி தலைவர்களால் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள்(12ம்தேதி)
வி .களத்தூர் உள்பட 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராமசபைக் கூட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவித்திட வேண்டும். மேலும், அனைத்து ஊராட்சித் தலைவர்களும் தாங்கள் செய்த பணிகளின் விபரங்கள், நிர்வாகத்தின் செயல்பாடுகளை தெரிவித்திட வேண்டும்.
அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவையென்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்கிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.
12ம்தேதி நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கிராம சபைக்கூட்டம் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) மூலம் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கிராமசபைக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் தரேஸ் அகமது அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Category: உள்ளுர் செய்தி, மாவட்ட செய்தி
0 comments