வரும் மாதங்களில் அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக வேலை வாய்ப்பு!
அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் இரண்டு நிறுவனங்கள் வரும் 3 மாதங்களில் வேலைக்கு புதிய ஆட்களை தேர்வு செய்யும் என்று வேலை வாய்ப்பு இணையதளமான பைத்.காம் செய்த சர்வே மூலமாக தெரிய வந்துள்ளது. 67% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை தேர்வு செய்யலாம் அதில் 64% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு புதிய வேலைக்கு தேர்வு செய்யலாம். இந்த சர்வே வேலை தேடி அமீரகம் வருபவர்க்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
சர்வேயில் கலந்து கொண்ட 218 அமீரக நிறுவனங்களில் 75% நிறுவனங்கள் வரும் 3 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் புதிய வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் இதில் 21% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்யலாம். இதில் 36% பேர் ஜூனியர் எக்ஸிகியூடிவ் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நிறுவனங்களில் 62% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை வரும் 3 மாதங்களுக்குள் தேர்வு செய்யலாம். 41% பன்னாட்டு நிறுவனங்கள் நிச்சயமாக வேலைக்கு ஆட்கள் என்று தெரிவித்துள்ளன.
பொதுவாக வளைகுடா நாடுகளில் வரும் 3 மாதத்திலிருந்து 1 வருடத்திற்குள் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேலை வாய்ப்பு இணையத்தின் துணைத் தலைவர் சுஹைல் தெரிவித்துள்ளார். இது இந்த நாட்டிலுள்ள வல்லுனர்களுக்கு உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் கால் பதிக்கும் வாய்ப்பாக அமையலாம்.
37% பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் வேலைக்கு ஆட்கள் எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.பெருபாலான நிறுவனங்கள் ஜூனியர் அல்லது மிடில் லெவல் எக்ஸிகியூடிவ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்.
கத்தார் நிறுவனங்களில் 35% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 24% நிறுவனங்கள் அனேகமாகவும், குவைத் நிறுவனங்களில் 35% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 24% நிறுவனங்கள் அனேகமாகவும், ஒமான் நிறுவனங்களில் 33% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 26% நிறுவனங்கள் அனேகமாகவும்,பஹ்ரைன் நிறுவனங்களில் 20% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 14% நிறுவனங்கள் அனேகமாகவும் அடுத்த 3 மாதங்களில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக இருப்பதாகவும்தெரிவித்துள்ளன.
Category: வேலைவாய்ப்பு


0 comments