.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

புஷ்ரா நல அறக்கட்டளையின் முக்கிய அறிவிப்பு !

Unknown | 9:00 AM | 0 comments

அன்பிற்குரிய சகோதரர்களே!
2117. அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்துகாக்கும்) கேடயமாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)


ரமலான் வந்துவிட்டாலே மக்கள் மனதில் ஒரு விதமான சந்தோசம் புன்னகை  பிறக்கும் ரமலானில் பல்வேறு நிகழ்சிகளும் சூழல்களும் நமக்கு சந்தோசத்தை ஏற்படுத்தும். அந்த சந்தோசத்தில் ஒன்றுதான் இப்தாருக்காக பள்ளிவாசலுக்கு  நோன்பு திறக்க செல்வது. பள்ளிவாசலுக்கு சென்று கஞ்சி குடித்து அங்கே கொடுக்கப்படும் வடை, போண்டா, சமோசா, போன்றவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்துவிட்டு வருவது பலரும் விரும்பவார்கள் பள்ளியில் காய்ச்சப்படும் கஞ்சி சிறு குழந்தைகள் சென்று வாங்கி வந்த கஞ்சியை தங்கள் வீ்ட்டில் உள்ள அனைவர்களும் அந்த கஞ்சியை கொன்டு நோன்பு திறப்பது தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் வழக்கமாக உள்ளன.

அல்லாஹ்வின் கிருபையால் நதூரிலும் இந்த நிகழ்வுகள் வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதே சூழல் நமதூரை சுற்றி இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் நிகழ்கிறதா? என்று இந்த ரமலானில் நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும்

நமதூரை சுற்றியுள்ள N.புதூர், வடகரை, கிருஷ்ணாபுரம், எறையூர், கொரக்காவடி, போன்ற ஊர்களில் போதிய வசதியின்மையின் காரணத்தால் குறிப்பிட்ட நோன்புகளுக்கு பிறகு கஞ்சி காய்ச்சுவதில்லை. சில வருடங்களுக்கு முன்பு நமதூரின் நிலையும் இப்படிதான் இருந்தது. ஆனால் இன்று அல்லாஹ்வின் கிருபையால்  அந்த சூழல் மாற்றமடைதுள்ளது. இப்படி ஒரு பரக்கத்தை அல்லாஹ் நமதூருக்கு கொடுத்திருக்கும் போது நம்மை விட கீழ் உள்ள ஊர்களுக்கு கொடுத்து உதவுவது நமது கடமை என்பது நாம் உணர வேண்டும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் கூலியை போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது.. (அஹமத், திர்மிதி)

இதன் அடிப்படையில் நமது புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த 5 வருடங்களாக இந்த ஊர்களுக்காக வசூல் செய்து கொடுத்து அவர்களும் நோன்புகஞ்சி காய்ச்ச உதவி செய்து வருகிறது. இந்த வருடமும் வசூல் செய்து உதவ புஷ்ரா நல அறக்கட்டளை நாடியுள்ளது. ஆகவே இந்த ஊர்களுக்கு இப்தார் கஞ்சி காய்ச்ச நாட்டமுள்ளவர்கள் அதிக அளவில் கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

அன்புடன்
தலைவர்:
M.அன்சர் பாஷா 9585358592
வி.களத்தூர்.
A.அப்துல்லா பாஷா050-3878421
துபை.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1