.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் நடந்த கல்விக்கடன் முகாமில் 537 மாணவ–மாணவிகளுக்கு ரூ.9¾ கோடி கல்வி கடனுக்கான ஆணை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்

Unknown | 3:22 PM | 0 comments




பெரம்பலூரில் நடந்த கல்விக்கடன் முகாமில் 537 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9¾ கோடி கல்விக்கடன் உதவிகளை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.கல்விக்கடன் முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளும் பங்கு பெற்ற பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கான கல்விக்கடன் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளில் பல்வேறு வங்கிகள் பங்கு கொண்ட கவுண்டர்களும் அமைக்கப் பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்படடிருந்தன.

முகாமில் மாணவ, மாணவிகளுக்கு 664 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் 586 விண்ணப்பதாரர்களின் விவரங்கள் 10 கணினிகள் மூலம் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டன. வங்கியாளர்களிடம் மாணவ, மாணவிகள் கல்விக் கடன் :கேட்டு வழங்கிய 537 விண்ணப்பங்களும் வங்கியாளர்களால் பரிசீலிக்கப்பட்டன. அவர்கள் அனைவரின் கல்லூரி கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் அனைவருக்கும் கல்விக்கடன் பெறுவதற்கு ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.9¾ கோடி கடன்

முகாமில் 537 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரம் கல்விக்கடன் பெறுவதற்கான ஏற்பளிப்பு ஆணைகளை பெரம்பலூர் கலெக்டர்தரேஸ் அஹமது வழங்கினார்.

முகாமில் மருதைராஜா எம்.பி., தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை, உதவி கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) அய்யம் பெருமாள், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் ராஜா(தஞ்சை), கனரா வங்கியின் உதவி பொது மேலாளர் ராமசாமி, முதன்மை மேலாளர் சுரேஷ்குமார் உள்பட அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1