.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பாகிஸ்தானில் ரம்ஜான் கொண்டாட்டத்தில் சோகம்: கடலில் மூழ்கி 20 பேர் பலி!!

Unknown | 4:15 PM | 0 comments

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரம்ஜான் பெருநாளைக் கொண்டாட ஏராளமான மக்கள் அங்குள்ள கிளிப்டன் கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். பருவகாலம் தொடங்கியுள்ளதால் ஜூன் முதலே கடலில் குளிக்கவேண்டாம் என்ற அறிவிப்புப் பலகையைக் காவல்துறையினர் அங்கு வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்களும் மக்களை கடலில் குளிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் விடுமுறை தினமான அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினரின் அறிவுரைகளையும் மீறி மக்கள் கடலில் இறங்கியுள்ளனர். இவர்களில் நீரில் மூழ்கி 20 பேர் இறந்துள்ளதாகவும், மூன்று பேரைக் காணவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 12 வயதுப் பையன் ஒருவனும், ஒரே குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.

கடற்படை நீச்சல்வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக கராச்சியின் கமிஷனர் ஷோயப் அஹமத் சித்திகி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் மீறி கடலில் இறங்கிய இவர்கள் அதிக காற்று மற்றும் வலுவான நீரோட்டத்தினால் கடலில் மூழ்கி விட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மற்றொரு கடற்கரைப் பகுதியான ஹாக்ஸ் பேயிலிருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இணையதளப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. பருவகாலம் தொடங்கிய ஜூன் முதலே கடலில் குளிக்கவேண்டாம் என்று எச்சரித்துள்ள அரசு பாதுகாவலுக்கு வீரர்களையும் நிலை நிறுத்தியுள்ளது. இருப்பினும் மக்கள் அவற்றை அலட்சியப்படுத்தியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி இபடட் நிசார் தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1