.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்தியாவில் சப்தமில்லாமல் நடைபெறும் வன்முறைகள்!

Unknown | 9:27 PM | 0 comments


லகில் குறிப்பாக இந்தியாவில் சப்தமில்லாமல் நடைபெறும் வன்முறைகள் குறித்து அறிந்து கொள்வோம்.
  1. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 23 லட்சம் குழந்தைகள் பலியாவதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலியாகின்றன.
  2. உலகில் தினமும் 17,000 குழந்தைகள் பலியாகின்றன என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது.
  3. சோமாலியாவில் உணவிற்காக ராணுவத்துடன் சண்டையிட்டு 7 பேர் பலி.
  4. மராட்டியத்தில் உணவின்றி தற்போதைய நிலவரப்படி 9000 குழந்தைகள் பலி..
இந்தியாவில் பஞ்சம்... வரலாற்றிலிருந்து...
  1. பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சத்தின் போது ஆளுநர் சொன்ன வார்த்தை .."இந்தியர்கள் அதிகமாக உணவு உண்டதால் பஞ்சம் வந்தது".
  2. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில், ஊனமுற்ற குழந்தைகளுக்கு மட்டுமே பஞ்சகாலத்தில் உணவு தரப்பட்டது.
  3. மற்றவர்களுக்குக் கடுமையான வேலைகளுக்குப் பின்பு 1 அணாவும், 450 கிராம் தானியமும் தரப்பட்டது..
  4. பஞ்ச காலத்தில் காட்டு நெல்லை விளைய வைத்து அதை உண்டனர். காடுகளில் விளையும் கிழங்குகளை விஷம் என அறியாமல் உண்டு மாண்டுள்ளனர்.
  5. எறும்பு புற்றுகளில் எறும்புகள் சேமிக்கும் உணவுகளைத் தேடி மக்கள் அலைந்தனர்.
  6. 18 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் தொடர்ந்த பஞ்சம், 1942 ஆம் ஆண்டுகளில் ஒரிசா மற்றும் வங்காளத்தைத் தாக்கிய புயல்,தொற்றுநோய்களால் வந்த பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சம்.
  7. இரண்டு உலகப்போர்களில் இறந்த மக்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் பசியால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
  8. ஆங்கிலேயர் சர்ச்சிலிடம் இந்திய பஞ்சத்தை பற்றியும் மக்கள் பசிகொடுமையால் மடிவது பற்றியும் வினவிய போது, "பின் ஏன் இன்னும் காந்தி சாகவில்லை"? என்று பதில் தந்தார்.
  9. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு செல்ல பஞ்சமே காரணம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
  10. எழுத்தாளர் மற்றும் விஞ்ஞானியான மதுஸ்ரீ முகர்ஜி, "30 லட்சம் மக்கள் சாக காரணம் உணவு பதுக்கலும், சர்ச்சிலும்தான்" என குற்றம் சாட்டுகின்றார்.
  11. எழுத்தாளர் ஜெயபாரதி பஞ்சம் பற்றி எழுதுகையில் "பசியின் மூலமாக சுதந்திர போராட்ட உணர்வு ஒடுக்கப்படுகிறது" என குறிப்பிடுகின்றார்..
பஞ்சம் ஏற்பட முக்கிய காரணங்கள்
  1. இந்திய நீர்ப் பாசன முறைகளை நிர்வகிப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஏற்பட்ட குளறுபடிகள்.
  2. பெருமளவிலான தானிய ஏற்றுமதி மற்றும் சந்தையைத் தனதாக்கிக்கொண்ட காலனிய ஏகாதிபத்திய முயற்சி.
  3. மிதமிஞ்சிய வரிச் சுமை.
  4. பணப் பயிர்களை முதன்மைப்படுத்தி விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றம்.
தற்போதைய நிர்வாக முறைகள் பஞ்சத்தைப் போக்குமா?
  1. "வறியவன் இன்னும் வறியவனாக சாவான்; வலுத்தவன் இன்னும் வலிமையானவன் ஆவான்." இதுதான் முதலாளித்துவ நிர்வாக முறை உலகிற்குக் காட்டியுள்ள ரிசல்ட்!
  2. இந்தியாவில் தற்கொலை செய்த 1 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் அழுகை சப்தம், கிரிமினல் பின்புலமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வில் வெளியே கேட்காமலே ஓய்ந்துவிட்டது.
  3. வறியவனின் உணர்வுகளை, ஜனநாயகத்தின் மற்றொரு முக்கிய தூணான ஊடகங்கள் படம் பிடிப்பது இல்லை; கார்ப்பரேட்டுகளின் வயிற்றினை வளர்ப்பதற்கே அவை முக்கியத்துவம் கொடுக்கின்றன!
  4. "தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என புரட்சி முழக்கமிட்டவனின் குரல்களெல்லாம் வெறும் ஏட்டிலேயே முடங்கிவிட்டன!
  5. முதலாளித்துவத்தின் கைப்பிடியில் சிக்கியுள்ள இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளை நம்பினால் "பசியிலிருந்தும் விடுதலை இல்லை; பயத்திலிருந்தும் விடுதலை இல்லை" என்பது தெளிவாகின்றது..
இந்தியாவில் பஞ்சங்களும் விவசாயிகளின் தற்கொலைகளும் சப்தமில்லாத வன்முறைகளாக தொடர்கின்றன!   தீர்வெழுதப்படுவது எப்போது?
அபுஷேக் முஹம்மது, துபை

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1