.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட்அமைக்க வேண்டும்.பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

Unknown | 9:14 PM | 0 comments


திருச்சி: தமிழகத்தின் மத்தியில் உள்ள திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் நெருக்கடி மிகுந்த இடத்தில் உள்ளதால், ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாநகர மக்கள் லோக்சபா தேர்தலில் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தின் மத்தியிலும், சென்னையையும், தென்மாவட்டங்களையும் இணைக்கும் பாலமாகவும் திருச்சி மாநகரம் உள்ளது. தென்மாவட்டத்திலிருந்து, சென்னை நோக்கி செல்பவர்களும், சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களும், திருச்சி மாநகரை கடந்து தான் செல்லவேண்டும். அப்படி ஒரு பூலோக அமைப்பை கொண்ட திருச்சி மாநகரில், அனைத்து மாவட்ட, பல மாநில பஸ்கள் வந்து செல்லும் சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட், நெருக்கடி மிகுந்த இடத்தில் இருப்பது, பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

அத்தோடு திருச்சி மாநகரில் சத்திரம் என்ற இடத்திலும் ஒரு பஸ்ஸ்டாண்ட் உள்ளது. இங்கு பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட, சில மாவட்ட பஸ்களும், டவுன் பஸ்களும் நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றன. திருச்சி மாநகரில் இரு பஸ்ஸ்டாண்ட் உள்ளதால், பயணிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக வலுத்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க.,- தி.மு.க., அரசுகள் மாறிமாறி வந்தும், இதுவரை மாநகர மக்களின் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த தி.மு.க., ஆட்சியில் பஞ்சப்பூர் அருகேயும், தேவதானம் அருகேயும் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைக்க இடம் பார்க்கப்பட்டது. பின் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போதுள்ள அ.தி.மு.க., அரசோ, ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைக்க அரசு அதிகாரிகள் மூலம் ரகசியமாக நிலம் பார்ப்பதாக தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட்டை சுற்றி ஹோட்டல்கள், லாட்ஜ்கள் வைத்துள்ளவர்கள், தி.மு.க.,-அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டை இடம் மாற்ற, அவர்கள்தான் முட்டுக்கட்டு போட்டு வருகின்றனர் என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது.

அதேபோல் சுயலாபத்துக்காக சில அரசியல்வாதிகள், ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து வருகின்றனர் எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இதையெல்லாம் மீறி ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைந்தால், திருச்சி மாநகர மக்கள் பெரிதும் பயனடைவர். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களிடம், ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைப்பதாக வாக்குறுதி கொடுப்பவருக்கே ஆதரவு கொடுக்க, திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு நகர் நல அமைப்புகளும், தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் வாக்குறுதியை கொடுத்து, யார் திருச்சி மாநகர நகர்நல அமைப்புகளின் ஆதரவை பெறப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1