.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கோக் பெப்சி போன்ற குளிர் பானங்களை தமிழகத்தில் தடை செய்க!வணிகர் சங்கங்கள் வேண்டுகோள்!

Unknown | 12:44 PM | 0 comments

கோக் பெப்சி போன்ற குளிர் பானங்களை தமிழகத்தில் தடை செய்க – வெள்ளையன் வேண்டுகோள்
கோக், பெப்சி போன்ற கேடுவிளைவிக்கும் தனியார் குளிர்பானங்களை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும் என்று த.வெள்ளையன் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் தனியார் கம்பெனி தயாரிப்பான குளிர்பானத்தை குடித்த சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் அபிராமி என்ற சிறுமி இறந்துவிட்டார்.
இன்னும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வப்போது கோக், பெப்சி போன்ற தனியார் குளிர்பானங்களில் கரப்பான் பூச்சி, ஈ, எறும்பு போன்றவை காணப்பட்டு வருகிறது. இதிலிருந்து இத்தகைய குளிர்பானங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படுவது இல்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது.
மேலும், இத்தகைய குளிர்பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ‘மாலத்தியான்’ எனும் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படுகிறது. லாபநோக்கம் ஒன்றே குறிக்கோளாக கருதி, மக்கள் நலனில் அக்கறை காட்ட தவறி வருகிறார்கள்.
எனவே, இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்காது தமிழ்நாட்டில் கேடுவிளைவிக்கும் இத்தகைய நச்சுப்பானங்களை உடனடியாக தடை செய்திட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறேன். மேலும் வணிகர்களும் இது போன்ற நச்சுப்பானங்களை பயன்படுத்தாமல் கைவிட வேண்டும். அது நம் கடமையும் ஆகும்” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி
இராச்குமார் பழனிசாமி

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1