Home �
வேலைவாய்ப்பு
� I.T.I முடித்தவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை!
Unknown |
8:19 PM |
0
comments
இந்தியாவின் மிகப்பெரிய பணி வாய்ப்பாளராக திகழும் இந்திய ரயில்வே உலகின் பெரிய ரயில்வேக்களில் ஒன்று. இந்த ரயில்வேயுடன் இணைந்த ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள கான்ஸ்டபிள் பிரிவிலான 659 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 01.01.2014 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிசிகல் மெஷர்மெண்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் ஆகிய நிலைகளில் தேர்ச்சி முறை இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.40/-ஐ போஸ்டல் ஆர்டர் வாயிலாக கட்டணமாக செலுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை நிரப்பி உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.01.2014
Category:
வேலைவாய்ப்பு
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments