.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை!

Unknown | 8:08 PM | 0 comments



வேப்பந்தட்டை, ஜன.5-

வி.களத்தூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மளிகை கடை

பெரம்பலூர் மாவட்டம் , வி.களத்தூர் அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர். மளிகை கடை வைத்துள்ளார். கடையின் மேலேயே வீடு கட்டி குடியிருந்து வருகிறார் . கடையின் உள்ளேயிருந்து வீட்டிற்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் கீழே இறங்கி வந்து விடக்கூடாது என்பதற்காக உள்பக்கம் உள்ள கதவை பூட்டி விட்டனர். அதன்பிறகு கடையின் பீரோ வில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

தொடர்ந்து கைவரிசை

பின்னர் அதே ஊரை சேர்ந்த மகாலட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த வெள்ளி கொலுசை திருடி சென்றுள்ளனர்.

அதே ஊரில் சிவகுமார் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் அங்கு ஏதும் கொள்ளையர் களுக்கு சிக்கவில்லை.

பின்னர் அதே ஊரில் இருந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பூட்டையும் உடைத்துள்ளனர். அங்கு கொள்ளையர் களுக்கு ஏதும் சிக்கவில்லை.தொடர்ந்து காசி என்ப வரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மொபட்டை கொள்ளையர் கள் திருடி சென்றுள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இந்த கொள்ளை சம்பவம் பற்றி வி.களத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கைரேகை நிபுணர்களும் வரவழைக் கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்யப்பட்டது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1