வி.களத்தூரில் நேற்றும், இன்றும் நல்ல மழை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது இதனால் நேற்று வி.களத்தூரிலும் நல்ல மழை பெய்தது.
வங்ககடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 13செ.மீ மழையும் சென்னையில் 8செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை பல மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் வி.களத்தூரிலும் நேற்று(21-10-2013) மாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. அவற்றில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. புகைப்படங்கள் மில்லத் நகர் பகுதி
Category: வி.களத்தூர்

0 comments