இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி! ! ! !
Unknown | 
														 10:00 PM |
														 
0
comments
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் தாது கொள்ளை மூலம் அரசுக்கு60லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தமிழக கடற்கரை மணலில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோ சைட் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த மணலை அள்ளவும், தாதுக்களை பிரிக்கவும் மத்திய அரசு சார்பில் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த நிறுவனம் தவிர தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தாது மணலை அள்ளியதாக பிரச்னை எழுந்து, அது தொடர்பாக கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வும் நடந்து வருகிறது.இந்நிலையில் மோனோசைட் தாதுக்களை அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வகையில் நாட்டுக்கு60லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தோரியம் அணுக்களை பிளக்க பயன்படுத்தப்படுகிறது. இது மோனோசைட்டை பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி பிரிக்கப்படுகிறது. இந்த தோரியம் கலந்த மோனோசைட் தாது தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி கடலோர மாவட்ட தாது மணலில் அதிகம் கலந்துள்ளது. இப்பகுதியில் தாதுமணலை அள்ள அணுசக்தி கழக ஒப்பதல் பெற வேண்டும். இந்த மணலை அள்ள இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார்னெட், இலுமினேட், ரூட்டைல் போன்ற தாதுக்கள் கலந்த மணலை அள்ள அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்கள், மோனோசைட் கலந்த மணலை அள்ளி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. அவர்களிடம் மோனோசைட் ஏற்றுமதிக்கு அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.இவ்வாறு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த வகையில் மொத்தம் 21 லட்சம் டன் மோனோசைட் தாது கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது 1,95,300 டன் தோரியத்துக்கு சமம். இதன் மதிப்பு60லட்சம் கோடி. இந்த பணம் முழுமையும், அரசுக்கு வராமல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளன. டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மத்திய அமைச்சர் அகமது சென்னையில் நேற்று கூறுகையில், “கடற்கரை மணலில் தோரியத்தை பிரித்து வெளிநாடுகளுக்கு கடத்தியதில்60லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செய்தி வெளியானது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக நிபுணர் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கைக்கு பின்பே உறுதி செய்யப்படும். தவறு நடந்திருப்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.அதிர்ச்சி தகவல் அம்பலம்இது குறித்து மத்திய அமைச்சர் அகமது சென்னையில் நேற்று கூறுகையில், “கடற்கரை மணலில் தோரியத்தை பிரித்து வெளிநாடுகளுக்கு கடத்தியதில்60லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செய்தி வெளியானது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக நிபுணர் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கைக்கு பின்பே உறுதி செய்யப்படும். தவறு நடந்திருப்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.மோனோசைட் என்றால் என்ன?செம்மண் நிறத்தில் பாஸ்பேட் கலந்த அரிய வகை தாது மோனோசைட். இதில் மோனோசைட்& சிஇ, மோனோசைட்& எல்.ஏ, மோனோசைட்& என்.டி, மோனோசைட் & எஸ்.எம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலக்கூறாக மோனோசைட் விளங்குகிறது. தோரியம் கதிர்வீச்சு அபாயம் உள்ளது . இந்தியா, மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவில் மோனோசைட் கிடைக்கிறது. தோரியத்தை பகுப்பதன் மூலம் ராடான் & 220 என்ற கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. அணுமின் நிலையங்களில் தோரிய பயன்பாடு மிகவும் அதிகம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் தாது கொள்ளை மூலம் அரசுக்கு
60
லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கடற்கரை மணலில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோ சைட் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த மணலை அள்ளவும், தாதுக்களை பிரிக்கவும் மத்திய அரசு சார்பில் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த நிறுவனம் தவிர தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தாது மணலை அள்ளியதாக பிரச்னை எழுந்து, அது தொடர்பாக கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மோனோசைட் தாதுக்களை அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வகையில் நாட்டுக்கு
60
லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோரியம் அணுக்களை பிளக்க பயன்படுத்தப்படுகிறது. இது மோனோசைட்டை பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி பிரிக்கப்படுகிறது. இந்த தோரியம் கலந்த மோனோசைட் தாது தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி கடலோர மாவட்ட தாது மணலில் அதிகம் கலந்துள்ளது. இப்பகுதியில் தாதுமணலை அள்ள அணுசக்தி கழக ஒப்பதல் பெற வேண்டும். இந்த மணலை அள்ள இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார்னெட், இலுமினேட், ரூட்டைல் போன்ற தாதுக்கள் கலந்த மணலை அள்ள அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்கள், மோனோசைட் கலந்த மணலை அள்ளி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. அவர்களிடம் மோனோசைட் ஏற்றுமதிக்கு அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வாறு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த வகையில் மொத்தம் 21 லட்சம் டன் மோனோசைட் தாது கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது 1,95,300 டன் தோரியத்துக்கு சமம். இதன் மதிப்பு
60
லட்சம் கோடி. இந்த பணம் முழுமையும், அரசுக்கு வராமல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளன. டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மத்திய அமைச்சர் அகமது சென்னையில் நேற்று கூறுகையில், “கடற்கரை மணலில் தோரியத்தை பிரித்து வெளிநாடுகளுக்கு கடத்தியதில்
60
லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செய்தி வெளியானது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக நிபுணர் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கைக்கு பின்பே உறுதி செய்யப்படும். தவறு நடந்திருப்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
அதிர்ச்சி தகவல் அம்பலம்
இது குறித்து மத்திய அமைச்சர் அகமது சென்னையில் நேற்று கூறுகையில், “கடற்கரை மணலில் தோரியத்தை பிரித்து வெளிநாடுகளுக்கு கடத்தியதில்
60
லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செய்தி வெளியானது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக நிபுணர் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கைக்கு பின்பே உறுதி செய்யப்படும். தவறு நடந்திருப்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
மோனோசைட் என்றால் என்ன?
செம்மண் நிறத்தில் பாஸ்பேட் கலந்த அரிய வகை தாது மோனோசைட். இதில் மோனோசைட்& சிஇ, மோனோசைட்& எல்.ஏ, மோனோசைட்& என்.டி, மோனோசைட் & எஸ்.எம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலக்கூறாக மோனோசைட் விளங்குகிறது. தோரியம் கதிர்வீச்சு அபாயம் உள்ளது . இந்தியா, மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவில் மோனோசைட் கிடைக்கிறது. தோரியத்தை பகுப்பதன் மூலம் ராடான் & 220 என்ற கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. அணுமின் நிலையங்களில் தோரிய பயன்பாடு மிகவும் அதிகம்.
Category: மாநில செய்தி


0 comments