Home �
மாநில செய்தி
� திருச்சியில் பரபரப்பு ஏர்போர்ட் கழிப்பறையில் 1 கிலோ தங்ககட்டி மீட்பு.
Unknown |
9:39 PM |
0
comments
திருச்சி: திருச்சி சர்வதேச விமானநிலைய டெர்மினலை சுத்தம் செய்யும் பணி நேற்று மாலை நடந்தது. அப்போது அங்குள்ள ஆண்கள் கழிப்பறையில், வெள்ளைநிற டேப்பினால் சுற்றப்பட்ட ஒரு பார்சல் கிடந்தது. இதை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அதை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி கஸ்டம்ஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டாய்லெட்டில் இருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்வதற்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்லங்கா, ஏர் ஏசியா ஆகிய 3 விமானங்கள் இங்கு வந்துள்ளன. இவற்றில் வந்தவர்களில் யாரேனும் ஒருவர் தான், இந்த தங்க கட்டிகளை கடத்தி கொண்டு வந்திருக்க வேண்டும். இதனை வெளியே கொண்டு செல்ல முயற்சித்தால் கஸ்டம்ஸ் சோதனையின்போது சிக்கிக் கொள்வோம் என்று பயந்து, டாய்லெட்டிற்கு சென்று தங்க கட்டிகளை வீசிச் சென்றிருக்கலாம். அவர் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்Õ என்றனர்.
Category:
மாநில செய்தி
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments