.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது!

Unknown | 8:47 PM | 0 comments


பெரம்பலூர், ஜன. 2:
பெரம்பலூரில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியா ளர் அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
கடந்த 1983ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைத் துறையில் பெரம்பலூர் உட்கோட்டமாகவே செயல் பட்டு வந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கான நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பெரம்பலூர் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், அரியலூர் கோட்டப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தலைமை வகித்த பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது, கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசியதாவது :
பெரம்பலூர் மாவட்டத்திற்கான நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியா ளர் அலு வலகம் இதுவரை அமைக்கப்படாத நிலையில், அரியலூர் மாவட்டத்திலுள்ள கோட்டப் பொறி யாளர் அலுவலகக் கட்டுப் பாட்டின் கீழ் பெரம்பலூர் உதவி கோட்டப் பொறியா ளர் அலுவலகம் மட்டுமே செயல்பட்டு வந்தது.
இனி பெரம்பலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கோட்டப் பொறியாளர் அலுவலகம் செயல்படுத்தப்படும் என சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் அடிப்படை யில் கோட்டப் பொறியாளர், கோட்ட கணக்கர், முதுநிலை வரைதொழில் அலுவலர், கண்காணிப்பாளர் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், கணினி இயக்குபவர், ஓட்டுநர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட 20 பணியிடங்களை உள்ளடக்கிய புதிய கோட்டப் பொறியா ளர் அலுவலகம் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய உட்கோட்டங்களை கொண்ட தாக இந்த அலுவலகம் இருக்கும். மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலை கள், மாவட்ட இதரசாலைகள், கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் ஆகிய சாலைகள் கோட்டப் பொறியாளர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். இதன்படி பெரம்ப லூர் உட்கோட்டத்தில் 253.56 கிமீ சாலைகளும், குன்னம் உட்கோட்டத்தில் 221.170 கிமீ நீளமுள்ள சாலைகளும், வேப்பந்தட்டை உட்கோட்டத்தில் 200.395 கிமீ நீளமுள்ள சாலைகளும் என மொத்தம் 675.125 கிமீ நீளமுள்ள சாலைகள் இந்த கோட்டப் பொறியாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம் துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் அனைத்து சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்தவும், மேம்படுத்தவும் ஏதுவாக இருக்கும் என்றார்.
விழாவில் பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவர் ஆர்டி ராமச்சந்திரன், குரும் பலூர் பேரூராட்சித் தலைவர் பாப்பம்மாள், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், ஒப் பந்ததாரர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பெரம்பலூர் கோட்டப் பொறி யாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். முடி வில் உதவி கோட்டப் பொறியாளர் வீரப்பன் நன்றி கூறினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1