.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

8ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தேர்வு!விண்ணப்பங்களை 4ம் தேதிக்குள் ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் தகவல்!

Unknown | 9:02 PM | 0 comments


பெரம்பலூர், ஜன. 2:
8ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறும் தேர்வுக்காக விண்ணப்பித்து ள்ளோரின் விண்ணப்ப த்தை ரூ.50 கட்டணத்து டன் ஆன்லைனில் இம்மா தம் 4ம் தேதிக்குள் அப் லோடு செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளில் தேசிய திறன் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான தேர்வு பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் தடையின்றி பிளஸ் 2 பயிலும் வரை ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத் தொகையை பெற தகுதியுடையோர், தேர்வில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை டவுன் லோடு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு விண்ணப்பிப்போர் பெரம்பலூர் மாவட்டத்தில், 2012&13ம் ஆண்டில் ஏழாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த வர்கள் 50 % மதிப்பெண்களையும், இதர பிரிவினர் 55% மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சிபெற்று, நடப் பாண்டு 8ம் வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும்.
அரசு மற்றும் நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளாக இருக்க வேண்டும்.
பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ1.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தத் தகுதி களை உடைய மாணவ, மாணவியர்
என்ற இணைய தளத்தில் டவுன்லோடுசெய்த விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, புகைப்படத்தை ஒட்டிய பிறகு, தேர்வுக் கட்டணமாக ரூ50வுடன் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் டிசம்பர் 28ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுமெனவும், மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இணையதள வெப் கேமராமூலம் ஸ்கேனிங் செய்தோ அல்லது பதிவேற்றம் செய்தோ டிசம்பர் 23ம் தேதி முதல் 31ம்தேதிவரை பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆன் லைன் பதிவேற்றப் பணிகள் 2ம்தேதி முதல் 4ம்தேதிவரை மேற்கொள்ளப்பட வேண் டும் என்றும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தவற்றை பிரின்ட் எடுத்து, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திலும், ரூ.50 தேர்வுக் கட்டணத்துடன் 4ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
எனவே, இந்த வாய்ப்பை தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்படுத்தி பயன்பெற, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1