.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற குழுவினர் 12-ந் தேதி சுற்றுப்பயணம்!

Unknown | 8:23 PM | 0 comments



பெரம்பலூர், நவ.9-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழு வினர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டு மற்றும் ஆய்வுக்கூட்டம நடத்தவுள்ளார்கள். என்ற மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித் தார்.

ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவ னங்கள் குழுவினர் 12.11.2013 அன்று பெரம்பலூர் மாவட் டத்தில் ஆய்வு பயணம்மற்றும் ஆய்வுக்கூட்டம் மேற் கொள்ள இருப்பதையொட்டி அனைத்து துறை அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற் றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

பி.ஜி.நாரயணனை தலை வராக கொண்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் குழு உறுப் பினர்களாக உள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்கள்

இக்குழுவினர் வருகிற 12-ந் தேதி அன்று பெரம்பலூருக்கு வருகை தந்து வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள சர்க்கரை ஆலையை ஆய்வு செய்ய உள் ளனர். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பெரம் பலூர் சர்க்கரை ஆலை நிறு வனம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை நிறுவன அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளனர்.

இக்குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்யும் போது அவர் களுக்கு தேவையான வசதி களை செய்யவும், தகவல்களை அளித்திடவும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்குமான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த பொறுப்பு அலுவலர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங் கள் குழுவினர் நடத்தவுள்ள ஆய்வு கூட்டத்தில அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறையின் மூலம் மேற் கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த புள்ளி விபரங்களை முறையாக தயார் செய்து சட்டமன்றப் பேரவை குழுவி னர் கேட்கும் கேள்வி களுக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிர மணியன், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (பொது) மலையாளம், இணைப் பதிவாளர் எறையூர் சர்க்கரை ஆலை சிவமலர், மாவட்ட வழங்கல் அலுவலர் செ.ராஜேந்திரன், உதவி இயக்குனர் (கலால்) சூரிய மூர்த்தி மற்றும் போக்கு வரத்துத்துறை, தமிழ்நாடு மின்சாரவாரியம் , காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை களை சேர்ந்த அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1