பெரம்பலூரில் புகைப்படம், விடியோ எடுக்க இலவச பயிற்சி!
பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் புகைப்படம், விடியோ குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மையத்தின் வேலைவாய்ப்பு இயக்குநர் ஜி. பார்த்தசாரதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தப் பயிற்சி மையத்தில் வரும் 16-ம் தேதி முதல் புகைப்படம் மற்றும் விடியோ குறித்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் 18- 35 வயதுக்குள், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும் பயிற்சியில், அதிநவீன உபகரணங்களைக் கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சியில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவுடன், தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-277896 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Category: மாவட்ட செய்தி
0 comments