Home �
வளைகுட செய்தி
� 20 லட்சம் புனித ஹாஜிகள் அரபாவில் திரண்டனர்!
Unknown |
5:46 AM |
0
comments
புனித மக்கா, அக்.3-
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற 20 லட்சத்திற்கும் அதிகமானஹாஜிகள் சவூதி அரேபியாவின் அரஃபா மைதானத்தில் திரண்டுள்ளனர்.
இஸ்லாத்தின் ஐம் பெரும் கடமைகளில் ஒன் றான ஹஜ் கடமையை வாழ் நாளில் ஒருமுறையாவது நிறைவேற்றிட வேண்டும் என முஸ்லிம்கள் அனைவரும் தம் வாழ்வி லட்சியமாக கொண்டுள்ளனர்.
இதற்காக உலகத்தின் அனைத்து நாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆர்வம் கொண்டு விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இடவசதி உள்ளிட்ட காரணங்களுக்காக 10 ஆயிரத்திற்கு ஒருவர் வீதம் என்ற விகிதத்திலேயே சவூதி அரசு அனைத்து நாடுகளுக்கும் விசா வழங்குகிறது. இந்த அடிப்படையில், இந்தியாவிற்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு ஹஜ் விசா வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான ஹஜ் பயணிகள் இந்த ஆண்டு புனித ஹஜ் செய்கின்றனர்.
சவூதி அரேபியாவிலுள்ள முஸ்லிம்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஹஜ் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர்.நேற்று பகல், இரவு முழுவதும் மினாவில் கூடாரங்களில் தங்கியிருந்த ஹஜ் பயணிகள் ஹஜ் பிறை 9 ஆன அரஃபா நாளில் அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் அனைவரும் குழுமியுள்ளனர். இன்று லுஹர், அஸர் தொழுகையை அரஃபா மைதானத்தின் மஸ்ஜிதுந் நமிராவிலும், அதையடுத்துள்ள பரந்த வெளியிலும் தொழுகின்றனர்.அதனைத் தொடர்ந்து முஜ்தலிபாவிற்குச் செல்லும் அவர்கள் மஃரிப் இஷா தொழுகையை நிறைவேற்றுகின்றனர். அங்கேயே கற்களை எடுத் துக் கொண்டு நாளை ஷைத் தானுக்கு கல் எறிகின்றனர்.
இந்த ஆண்டு ஹஜ் பயண ஏற்பாடுகள் குறித்து சவூதி ஹஜ் கமிட்டியின் தலைவர் இளவரசர் மிஷாய் பின் அப்துல்லாஹ் கூறியதாவது- இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக வருகை தந்துள்ள ஹஜ் பயணிகளை வரவேற்கும் நிகழ்வு எந்தப் பிரச்சனையும் இன்றி மிகச் சிறப்பாக முடிந்துள்ளது. அரஃபா மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளில் எந்த குறைபாடும் இல்லாமல் ஹஜ் கடமைகள் முழுமையாக நிறைவேற சவூதி அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் உடல் மற்றும் தொழில் நுட்ப நிலைகளோடு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
புனித மக்கா, புனித மதீனா உள்ளிட்ட தலங்களில் ஹஜ் பயணிகளின் பாதுகாப்பை சிறப்பாக செய்வதற்காக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த ஆண்டு வங்கதேசம், சூடான், சோமாலியா, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வருகை தந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டவர் களில் 109 வயது நிறைவடைந்த மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஹுசைன் பிஸ்வாஸ் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks photo :-arabnews
Category:
வளைகுட செய்தி
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments