.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேக்கம்! தரையிறங்க முடியாததால் 15 விமானங்கள் வானத்தில் வட்டமடித்தன! பயணிகள் அதிருப்தி

Unknown | 9:38 PM | 0 comments





சென்னை, அக்.19:
சென்னையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலைய ஓடுபாதை முழுவதும் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் சென்னைக்கு வரும் விமானங்கள் உடனடியாக தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. மழை சிறிது ஓய்ந்து தண்ணீர் வெளியேறியதும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின. எனவே, சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
கடும் மழையால் சென்னை நகரில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணியாளர்கள் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதால் விமான நிலையத்துக்கு குறித்த நேரத்துக்கு வரமுடியவில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்து விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
இதுபோல் ஒரே விமானத்தில் பயணம் செய்பவர்கள் உள்பட பலரும் விமான நிலையத்துக்கு தாமதமாக வருவதாக தகவல் தெரிவித்தனர். அவர்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கு தொலை பேசியில் தகவல் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் குறித்த நேரத்துக்கு விமானங்கள் புறப்பட முடியவில்லை.
பெரும்பாலான விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன. குறிப்பாக, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, கொச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்கள், சிங்கப்பூர், கொழும்பு, மஸ்கட், கத்தார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அயல்நாட்டு விமானங்கள் என 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
விமானங்களின் வருகை, புறப்பாடு பற்றி பயணிகளுக்கு முறையான அறிவிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால், சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் விமானம் குறித்த நேரத்தில் வந்து செல்வது போல் அறிவிக்கப்பட்டு இருந்தன. விமானங்கள் வருகை, புறப்பாட்டு பற்றிய தானியங்கி பலகைகளில் தாமதம் பற்றிய எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. இதனை கண்டு பயணிகளை வரவேற்க வந்தவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதிகாரிகள் கூறுகை யில், மழை காரணமாக விமானங்கள் தாமதமாக இறங்குகின்றன. மேலும் விமான நிறுவனங்கள் எங்களுக்கு தகவல் தந்தால் தான் நாங்கள் விமானங்களின் வருகை, புறப்பாடு பற்றிய தகவல்களை அறிவிக்க முடியும் என்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1