நபிகள் நாயகம் பொன்மொழிகள் சில !
* உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றிவிடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.
* நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டிவிடும்.
* வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். முடிந்தவரை தருமமும் செய்யுங்கள்.
* மக்களுக்கு தேவைப்படுகின்ற நேரத்தில் உணவை பதுக்கி வைப்பவர்கள் குஷ்டரோகியாகவும் வறுமைப்பிடியிலும் துன்பப்படுவார்கள்.
* பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.
* உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.
* இறைவனை நீ பார்க்காவிட்டாலும் உன்னை அவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.
* ஏழைகளின் பிரார்த்தனை இல்லை என்றால், செல்வந்தர்கள் அழிந்தே போவார்கள்.
- நபிகள் நாயகம்
Category: சமுதாய செய்தி
0 comments