56 சதவீத இந்தியர்கள் குறைந்தது 5 மணி நேர இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை: ஆய்வில் தகவல்!!
டெல்லி: நாட்டில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்ற நிலையில், தற்போது எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 56 சதவீத இந்தியர்கள் குறைந்தது 5 மணி நேரமாவது இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 46 சதவீத இந்தியர்கள் குறைந்தது 6 மணிநேரமாவது, இணையத்தை பயன்படுத்துவதாகவும், இதில் 82% பேர் இணையம் அல்லாத நேரத்தில் பதற்றத்தத்துடன் கூடிய பயத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதில் இந்தியாவில் 46% இந்தியர்கள் குறைந்தது 6 மணிநேரம் இணையத்தை பயன்படுத்துவதாகவும், உலகளவில் இது 29% எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகளவில் 82 சதவவீத பயனாளர்களில் இந்தியாவிலேயே, அதிகமான பதற்றத்தத்துடன் கூடிய பயத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா(2,117), சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 9,417 வளர்ந்த நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இதில் இந்தியாவில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் இணையத்தை பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: மாநில செய்தி

0 comments