ஓர் இஸ்லாமிய நாட்டின் முதல் முயற்சி: செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை அனுப்ப அமீரகம்(U.A.E.) தீர்மானம்!
துபாய்: செவ்வாய்க்கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலன் ஒன்றை மதிப்பீட்டு அளவில் 2021ம் ஆண்டு அனுப்பப்போவதாக ஐக்கிய அரபு இராச்சியம் (U.A.E.) அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற தேசிய விண்வெளி நிறுவனம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும் அது கூறியிருக்கிறது.
இதை விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்லாமிய உலக நாடுகளின் முதல் முயற்சியாக ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அதிபர் வர்ணித்தார்.
செவ்வாய்க்கிரகத்தை அடைவதற்கான 60 மில்லியன் கி.மீ பயணமானது சென்றடைவதற்கு ஒன்பது மாதங்கள் பிடிக்கும்.
Category: துபாய்




0 comments