வெளிநாட்டிலிருந்து சிகரெட் எடுத்து வர கட்டுப்பாடு மத்திய அரசு அதிரடி!
புதுடெல்லி
சிகரெட் புகைப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சிகரெட் மீதான உற்பத்தி வரி 11 சதவீதம் முதல் 72 சதவீதம்வரை உயர்த்தப்பட்டது.
இப்போது மத்திய அரசு, சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மற்றொரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறவர்கள் 100 சிகரெட்டுகளை வரியின்றி கொண்டு வரலாம் என்று விதி இருந்தது. இப்போது இது 50 சிகரெட்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மதுபானம் அல்லது ஒயின் 2 லிட்டர் அளவுக்கு வரியின்றி எடுத்து வரலாம் என்ற விதியில் மாற்றம் இல்லை.
Category: மாநில செய்தி


0 comments