வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் விருது வழங்கப்பட்டது!!!
கலையின் குரல் மாத இதழ் பைன் ஆர்ட்ஸ் வழங்கும்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும்
சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவை
39 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இதில் கல்வியாளர்கள், சமூக சேவகிகள், வணிகர்கள், சுய உதவி குழு பெண், ஊராட்சி மன்ற தலைவர், தொழில் அதிபர்களையும் பாராட்டி விருது வழங்கி வருகிறது.
அதன்படி விருது வழங்கும் விழா
19.07.2014 சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில்
சென்னை தேனாம்பேட்டை ரஷ்யன் கல்சுரல் சென்டரில்
நடைபெற்றது.
இதில் வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு சிறந்த ஊராட்சி மன்ற மக்கள் சேவை பண்பாளருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் விருது வழங்கப்பட்டது.
Category: உள்ளுர் செய்தி








0 comments