.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்!

Unknown | 1:56 PM | 0 comments



பெரம்பலூர்,ஜூலை.10.

ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்படும்.

கடந்த 2013 – 14ம் ஆண்டுக்கான இளைஞர் நல பணிகளுக்காக விருதுகள் வழங்கப்பட உள்ளது. இளைஞர் (தனி நபர் பிரிவிற்கு) குறிப்பிட்டுள்ள நிதியாண்டில் வயது 13 வயதிலிருந்து 35 வயதுக் குள்ளும் தன்னார்வ அடிப் படையில் நிதி ஆதாயம் பெறாமல் தொண்டு செய்திருக்க வேண்டும்.

இதற்கு முன் விருது பெற்றவர்கள் மத்திய மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விருது பெற விண்ணப்பிக்ககூடாது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் சங்க பதிவு சட்டத்தின் படி பதிவு செய்து நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய போட்டோ செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்க வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு தேசிய விருது இரண்டு லட்சம் ரொக்கமும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து மூன்று நகல்களுடன் கருத்துருக்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பங்களை கலெக்டர் தலைமையிலான குழு பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரைக்கும். மாவட்டக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட கருத்துருக்கள் மாநில குழுவில் வைக்கப்பட்டு அக்குழுவினரால் பரிந்துரைக்கும் கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1