பலஸ்தீன அரசுக்கு சவுதி முழுஆதரவு அளிக்கும் ...!
பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய
அராஜகம் நிறுத்தப்பட வேண்டும் என
தனியாகவும் இஸ்லாமிய
அமைப்புகளூடாகவும் குரல் கொடுக்க
ஆரம்பித்திருக்கும் சவுதி அரேபியா,
பலஸ்தீன அரசாங்கம்
இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளும்
நடவடிக்கைகளுக்கு தாம்
முழு ஆதரவளிக்கப்போவதாகவும்
அறிவித்துள்ளது.
இதனடிப்படையில்
ஐ.நா பாதுகாப்பு சபையிலும் பலஸ்தீன
அரசு ஐ.நா மனித உரிமைகள்
ஆணைக்குழுவை நாட முடிவெடுத்தால்
அங்கும் தமது முழு ஒத்துழைப்பையும்
ஆதரவையும் வழங்க தாம் தயாராக
இருப்பதாக ஐ.நாவுக்கான சவுதி அரச
பிரதிநிதி அப்துல்லா அல்
முஅல்லமி தகவல் வெளியிட்டுள்ளார்.
இதை முன்னரே செய்திருக்கணும்!
Category: வளைகுட செய்தி



0 comments