.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தமிழகத்தில் 3ல் ஒருவருக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Unknown | 2:15 PM | 0 comments



இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதித்து 6 மணி நேரத்துக்கு ஒருவர் மரணிப்பதாக இந்தியன் டென்டல் அசோசியேஷன் தலைமைச் செயலாளர் டாக்டர் அஷோக் தோப்லே கூறியுள்ளார்.

இந்த நிலை இன்னும் மோசமாகக் கூட இருக்கலாம். ஏன் என்றால், இது மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் கூறப்படும் தகவல் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், சிகரெட்டி புகைப்பவர்களும், வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களும் அதிகரித்திருப்பதே, புற்று நோயாளிகளின் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலங்களில் தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதில்லாமல் மேற்கு வங்கம், ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் 3ல் ஒருவருக்கு புகையிலை பழக்கம் உள்ளது என்று கூறுகிறார்.

இதற்கு ஒரே ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால், இந்தியாவில் ஒட்டு மொத்தகமாக புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1