.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

+2 முடித்தவர்களுக்கு முப்படைகளில் அதிகாரி வேலைவாய்ப்பு!

Unknown | 10:36 PM | 0 comments



 



தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்து பணிகளில் சேருவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 28.9.2014 ஆம் தேதி நடத்த உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 375

காலியிடங்கள் விவரம்:

தேசிய பாதுகாப்பு அகாடமி – 320

ராணுவம் – 208

கப்பற்படை – 42

விமானப்படை – 70

இந்திய நேவல் அகாடமி – 55

வயது வரம்பு: 02.01.1996க்கு முன்போ அல்லது 01.01.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10 + 2 பிரிவிற்கு: இயற்பியல், கணிதம் கொண்ட பாடப்பிரிவில் +2 தேர்ச்சி. +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உடற்தகுதிகள்: மார்பளவு: 81 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் 5 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 2.4 கி.மீ தூரம் ஓடி கடக்க வேண்டும். புஷ்அப் – 20, சிட்அப் – 20, சின்அப் – 8. 3-4 மீட்டர் வடம் ஏறுதல், ஸ்கிப்பிங் போன்றவற்றில் வெற்றி பெற வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும் அல்லது நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சி ஆரம்பமாகும் தேதி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் 134வது கோர்ஸ் மற்றும் கப்பல் படை அகாடமியின் 96வது +2 கோர்ஸ்கள் பயிற்சிகள் 02.07.2015 தொடங்க உள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1