பெரம்பலூர் அருகே கிணற்றில் தாய்-மகள் உடல்கள் மிதந்தன! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!
பெரம்பலூர் அருகே கிணற்றில் தாய்-மகள் உடல்கள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 உடல்கள் மீட்பு
பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் 5 வயது சிறுமியின் உடல் நேற்று மாலை மிதந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டனர்.
சிறிது நேரத்தில் அதே கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதந்தது. பின்னர் அந்த பெண்ணின் உடலையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து 2 உடல்களையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
தாய்-மகள்
இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா தலைமையில் துணை சூப்பிரண்டு சுருளியாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் சேலம் மாவட்டம் மேலகடம்பூர் கிராமத்தை சேர்ந்த ரேவதி (வயது 30), அவருடைய மகள் காவியா (5) என தெரியவந்தது.
செஞ்சேரிக்கு தெரிந்தவர்களை பார்ப்பதற்காக வந்த ரேவதி, காவியா இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அவர்கள் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Category: மாவட்ட செய்தி
0 comments