ஐடியல் பள்ளியில் நடந்த மருத்துவ விழிப்புணர்வு கூட்டம்
வி.களத்தூர் ஐடியல் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியில் நேற்று (24.06.2014) மாலை சரியாக 3 மணியளவில் பெற்றோர்கள் மற்றும் மாணவரகளுக்கான மருத்துவ விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர். திருமதி இராஜேஸ்வரி MD அவர்கள் கலந்து கொண்டார்.
மாலை 3 மணியளவில் ஐடியல் பள்ளியின் அரபி ஆசிரியர் மௌலவி. ராசித் அவர்கள் கிராஅத் இந்த மருத்துவ ஆலோசனைக் கூட்டத்தை துவைக்கி வைத்தார். சிறப்ப அழைப்பாளர்டாக்டர். திருமதி இராஜேஸ்வரி MD அவர்கள் குழந்தைகள் வளர்ப்பு குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகளை வழங்கினார். டாக்டர் அவர்களின் ஆலோசனை உரைக்கு பிறகு பெற்றோர்கள் தங்களின் சந்தேகங்களை டாக்டரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர்.
கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் T. முருகன், பள்ளியின் தாளாளர் F. மஹசர் அலி, பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர். M. கமால் பாஷா, பள்ளி ஆசிரியைகள் மற்றும் 500க்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். மாலை 5 மணியளவில் மருத்துவ கூட்டம் நிறைவடைந்தது.
Category: உள்ளுர் செய்தி






0 comments