.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வங்கிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை: ஏடிஎம் சேவை பாதிக்கும் அபாயம்!

Unknown | 8:48 PM | 0 comments



பொங்கலை முன்னிட்டு வங்கிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏடிஎம் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு நேற்று முதல் வரும் 16ம் தேதி முடிய 4 நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இது போல் வங்கிகளுக்கு இன்று முதல் 16ம் தேதி முடிய 3 நாள் தொடர் விடுமுறை ஆகும். வங்கிகளுக்கு இன்று தான் பொங்கலுக்கு முந்தைய கடைசி வேலை தினம் ஆகும். எனவே, ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி  இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடை பெறாது.

இதன் காரணமாக ஏடிஎம்களில் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படும் நிலை உள்ளது. இது குறித்து வங்கி வட்டாரங்களில் விசாரித்த போது, ''ஏடிஎம் மையங்களில் திங்களன்று பணம் வைக்கப்படும்.

மாதத்தின் மத்திய நாட்களாக இருப்பதால் பண சேவை பெறுவதில் பெரிய அளவில் பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை'' என்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1