பாட்டீல் தண்ணீரை விட குழாய் தண்ணீர் உடலுக்கு நல்லது – ஆய்வு முடிவுகள்!
பாட்டீல் தண்ணீரை விட குழாய் தண்ணீர் உடலுக்கு புத்துணர்ச்சியை தருகின்றது என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஆய்வில் இந்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.
MFE சுற்றுச்சூழல் மையமானது இரண்டு வகையான தண்ணீர் பாட்டீல்களை எடுத்து ஆய்வு நடத்தியதில் அந்த பாட்டீல் தண்ணீரானது அசுத்தங்கள் நிறைந்து மோசமானதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிற்றர் தண்ணீரில் 16,299 நானோகிராம்ஸ் பியுடிலேட் ஹைராக்சிடுலின் (butylated hydroxytoluene) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாட்டீல் தண்ணீரானது மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மறு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த தண்ணீரானது அசுத்தமான முறையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், குழாய் தண்ணீரானது இயற்கையான முறையில் சுத்தமானது என்று தெரிவித்துள்ளனர்.
Category: துனுக்குகள்


0 comments