சவுதி அரேபியாவில் இந்த ஆண்டில்(2013) இதுவரை 73 பேருக்கு மரண தண்டனை!!
சவுதி அரேபியாவில், போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியரின் தலை, நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்டது.
சவுதியில், பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, தலை துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 76 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், இந்த ஆண்டு, இதுவரை, 73 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த, முகமது ஜாயர் கான் கோல், சவுதி அரேபியாவிற்கு, போதைப் பொருளை பெருமளவு கடத்திய குற்றத்திற்காக, வழங்கப்பட்ட மரண தண்டனை, நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
Category: வளைகுட செய்தி


0 comments