.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு!

Unknown | 8:52 PM | 0 comments

சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

நாகை, விழுப்புரம், திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மாவட்டகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு

பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் விடுமுறை அளித்த மாவட்டங்களில் மட்டும் தேர்வு தள்ளிவைப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும்  இன்று நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகளில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வி.களத்தூர் அதி காலை 4:00 முதல் நல்ல மழை பெயந்துகொண்டு வருகிறது அதனால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது வானம் மேகமுட்டவுடன் கணப்படுகிறது

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1