.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐஎஸ்ஐ தொடர்பு என பேசுவதா? ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

Unknown | 9:51 PM | 0 comments


டெல்லி: முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மத மோதல்கள் தூண்டிவிடப்பட்டன. இப்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அங்கு தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இதற்கு முஸ்லிம் மதகுருக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஷியா பிரிவு மதகுரு மெளலானா சைய்ஃப் அப்பாஸ் நக்வி கூறுகையில், இத்தகைய பேச்சுகள் முஸ்லிம் சமூகத்தினரை புண்படுத்தக் கூடியவை.


 இது மதவாத சக்திகளை வலுப்படுத்தும். நாட்டுப் பற்றுள்ள முஸ்லிம்களை அவமானப்படுத்தும் பேச்சு. ராகுல்காந்தி உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
 மற்றொரு மதகுரு மெளலானா அபுல் இர்ஃபான் மியான் கூறுகையில், ராகுலின் கருத்து துரதிர்ஷ்டவசமானது. அவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவுக்காக எதையும் செய்வோம். என்றார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1