பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் 11 ஆயிரத்து 550 பேர் விண்ணப்பித்துள்ளனர் கலெக்டர் தகவல்!
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்த, நீக்க, பாகம் மாற்றம் செய்ய இது வரை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 11 ஆயிரத்து 550 நபர்கள் விண்ணப் பித்துள்ள னர்.
31-ந் தேதி வரை
இது தொடர்பாக பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வெளி யிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1.01.2014 ம் தேதியினை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், இதுவரை வாக்காளர் பட்டிய லில் இடம் பெறாதவர்களும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்ப தற்கும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் தங்கள் பெயர்களை திருத்தம், நீக்கம், பாகம் மாற்றம் செய்ய அக்டோபர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பெயர்களை சேர்க்க படிவம் 6யும், நீக்க படிவம் 7யும், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8யும், பாகம் மாற்ற படிவம் 8ஏ-வையும் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் (பள்ளி களில்) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை உள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் பெறப் படுகிறது. இவை தவிர 6.10.2013, 20.10.2013 மற்றும் 27.10.2013 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம் களிலும் பூர்த்தி செய்யலாம்
Category: மாவட்ட செய்தி


0 comments